எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, சமையல் எரிவாயு விலை குறித்து நிர்ணயம் செய்கின்ற அமைச்சரவை உபகுழுவிலிருந்து விலகியுள்ளார்.
இந்தக் குழுவில் இருந்து கொண்டு விலை அதிகரிப்பு நிர்ணயத்திற்குப் பரிந்துரை செய்தால் அரசாங்கத்திற்குள் மற்றும் வெளியில் தனக்கு எதிரான எதிர்ப்புக்கள் வலுப்பெறக்கூடும் என்ற காரணத்திற்காகவே அமைச்சர் அந்தக் குழுவிலிருந்து விலகியதாக கூறப்படுகின்றது.