கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் நவகமுவ பிரதேசத்தை அண்மித்த களனி கங்கையில் மிதந்துவந்த நிலையில் சடலமொன்றை பொலிஸார் இன்று சனிக்கிழமை பகல் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
23 வயதுடைய ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் அண்மையில் கடத்தப்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.