இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த பெண்ணின் சடலத்தை உறவினர்கள் கொண்டு சென்ற நிலையில் அதிகாரிகள் உடனடியாக சென்று சடலத்தை இரவோடு இரவாக எரித்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
குருவிட்ட பாதகம பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் வேறு ஒரு நோய் காரணமாக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இருந்தார்.
இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவு வருவதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.
பரிசோதனை அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து உயிரிழந்தவரின் உடலை தும்மல்கொட பகுதியிலுள்ள வீட்டுக்கு உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
உடல் கொண்டு செல்லப்பட்டு சில மணி நேரங்களுக்குள்ளேயே வீட்டிற்கு சென்ற பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகள் சடலத்தை ஒரே இரவில் தகனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.