கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலை மரணமடைந்துள்ளார்.
உயிரிழக்கும்போது அவருக்கு 65 வயதாகும்.
கடந்த 13ஆம் திகதி இவர் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.