மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன்படி இன்று (10) நள்ளிரவு முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை இந்த பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
அத்துடன், மக்களை ஒன்று திரட்டும் அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையங்களுக்குள் செல்லும் மற்றும் உள்ளே நிற்கக்கூடியவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது.
அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதுடன், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு உரிய தரப்பிற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.