பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின், கராச்சியில், கடந்த மாதத்தில் இருந்து பருவமழை பெய்து வருகிற நிலையில் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் சிக்கி 42 பேர் உயிரழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பெஷாவர் நகரில், நேற்று புதன்கிழமை சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது கொண்டாட்டங்கள் நடந்த மைதானத்தின், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர்.