அனைத்து நீரேற்று நிலையங்களும், நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் மின்சாரம் மூலமே இயக்கப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் இலங்கை மின்சார சபையின் பணியாளா்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்படுகின்ற மின்சாரத் தடைகளைச் சீர்செய்ய முடியாவிட்டால் நீர் விநியோகமும் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்வழங்கல் தொழிற்சங்க கூட்டுக் கூட்டணியின் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க இதை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மின்சாரத் தடை ஏற்பட்டால், தேவையான மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள மாற்று நடவடிக்கை இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் ஏதேனும் மின் தடை ஏற்பட்டால், குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்று உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளைத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையை விரைவில் தனியார் மயமாக்கும் முயற்சி இடம்பெறும் என்பது தெளிவாகிறது என ரத்நாயக்க தெரிவித்தார்.