இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 1க்கு 1 என்ற கணக்கில் நியுசிலாந்து அணி சமப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள நியுசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு 20 ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதன் முதலாவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி வெற்றி கொண்ட நிலையில் தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
இந்த நிலையில், கடந்த 22 ஆம் திகதி ஆரம்பித்த 2 அவது டெஸ்ட் தொடரை வெற்றி பெறும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்கிய போதிலும், மழையின் குறுக்கீடடின் காரணமாக ஆட்டத்தில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தன.
என்ற போதிலும் இந்த போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் சார்பில் அணித்தலைவர் திமுத் கருணாரத்னே 65 ஓட்டங்களையும் டீ சில்வா 109 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
போல்ட் மற்றும் டிம் சவுத்தி ஆகியோர் தலா 3 மற்றும் 4 விக்கெட்டுக்களை நியுசிலாந்து சார்பில் கைப்பற்றியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை பொறுப்புடன் ஆரம்பித்த நியுசிலாந்து அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட்டுக்களை இழந்து 431 ஓட்டங்களை குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து 187 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், தமது 2 ஆவது இன்னிங்ஸை இஆரம்பித்த இலங்கை அணி நியுசிலாந்து அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 122 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 65 ஓட்டங்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸால் தோல்வியை தழுவியது.