X-Press Pearl கப்பலின் இலங்கைப் பிரதிநிதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு சட்ட மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த இலங்கை பிரதிநிதியை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குறித்த நபரின் அலுவலகம் மற்றும் வீடு ஆகியன சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர் அப்பகுதிகளில் இருக்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.