ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகராகிய பஸில் ராஜபபக்ஷ வருகின்ற 23ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார் என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு திரும்பிய கையுடன் அவர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உட்பட அரச முக்கியஸ்தர்களுடன் அவசர கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.
விசேடமாக நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள உரிபொருள் விலை உயர்வு, எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் உட்பட பல விடயங்கள் குறித்து முக்கிய பேச்சினை நடத்துவார் என்று சொல்லப்படுகின்றது.