அமைச்சர் விமல் விமல் வீரவன்சவின் மனைவி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
அரசியல் நடவடிக்கைகளில் தான் மற்றும் தனது பிள்ளைகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.