நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தின் வைத்திய பிரிவினால் நடமாடும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது
நடமாடும் தடுப்பூசி வழங்கும் செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரப் பிரிவினர் கலந்து கொண்டனர்.