பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் இராணுவத்தளபதி அவர்களின் எண்ணக்கருவிற்கு இணங்க யாழ் மாவட்ட கட்டளைத் தலைமையகத்திற்கு உட்பட்ட சகல இராணுவ முகாம்கள்,பாவனையற்ற இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் தென்னை பயிற்செய்கை செய்யும் படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப்ப 2021 யூலை மாதம் 10ம் திகதி இவ் வேலைத்திட்டமானது எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் அமைந்துள்ள யாழ் ஆயருக்கு சொந்தமான தோட்டத்தில் 10 ஏக்கர் அளவிலான நிலப்பிரதேசத்தில் 700 தென்னங்கன்றுகள் நடப்பட்டுள்ளன
இந் நிகழ்விற்காக பிரதம விருந்தினராக யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அதிகாரி உட்பட யாழ் கத்தோலிக்க குருமுதல்வவர் பீ.ஜெ. ஜெபரத்னம் அடிகளார் மற்றும் யாழ் மாவட்ட கரிதாஸ் கியுடெக் நிறுவனத்தின் தலைவர் யுஜின் பிரான்சிஸ் அடிகளார் கலந்து கொண்டிருந்தனர்.
இதற்கு தேவையான தென்னங் கன்றுகளை தென்னை,கித்துள்,பனை மற்றும்இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத் தொழில் பண்டங்கள் உற்ப்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கௌரவ அருந்திக்க பெர்னாந்து அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்விற்காக 52வது காலாற்படைத் தலைமையகத்தின் கட்டளைத்தளபதி, 522வது படைத்தலைமயக தளபதி, இராணுவ முகாம்களின் தளபதிகள், உயரதிகாரிகள், அரச அதிகாரிகள், 52வது படைப்பிரிவின் படைவீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.