தற்போதைய அரசாங்கத்திடம் இருந்து எந்தவொரு அமைச்சுப் பதவியையும் பெற எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தீர்மானம் எடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மைத்திரி உட்பட 4 பேர் அரசாங்கத்தில் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதற்கு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு மைத்திரி மேற்படி நிராகரிப்பு தெரிவித்துள்ளார்.