இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி, டக்வத் லுயிஸ் முறைப்படி 59 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்தியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியக் கிரிக்கெட் அணி, மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ளது.
அந்த வகையில் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்தியா அணி, மேற்கிந்திய தீவுகள் அணியுடன் விளையாடி வருகின்றது.
இதற்கமைய முதல் போட்டி மழையினால் கைவிடப்பட, இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ட்ரினிடெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியின் முழுமையான முடிவினை தற்போது பார்க்கலாம்,
எதிர்பார்ப்பு
மிக்க இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட
தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுகள்
இழப்புக்கு 279 ஓட்டங்ளை பெற்றுக்கொண்டது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சு சார்பில், கார்லோஸ் பிரத்வெயிட் 3 விக்கெட்டுகளையும், ரொஸ்டன் சேஸ், ஜேஸன் ஹோல்டர் மற்றும் செல்டோன் கொட்ரேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனையடுத்து, 280 என்ற வெற்றி இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. இதில் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல், 300ஆவது ஒருநாள் போட்டி என்ற மைல்கல் போட்டியில் தடம் பதித்தார். இவரே மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர் ஆவார்.
அவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் என்ற சாதனையுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் 5 ஓட்டங்களுடன் ஏமாற்ற, அவரை தொடர்ந்து ஹெட்மயர் களம் இறங்க போட்டியின் 12ஆவது ஓவரில் மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் கழித்து தாமதாக தொடங்கியது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், மழை காரணமாக போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கு 270 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இதனால் அதிரடியாக ஓட்டத்தை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதற்கயை மேற்கிந்திய தீவுகள் அணியால், 42 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இந்திய அணி, டக்வத் லுயிஸ் முறைப்படி 59 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்திய அணியின் பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், மொஹமட் ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், காலீல் அஹமட் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக இந்தியக் கிரிக்கெட் அணி சார்பில், 125 பந்துகளில் 1 சிக்ஸர் 14 பவுண்ரிகள் அடங்களாக 120 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட விராட் கோஹ்லி, தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி நாளை மறு தினம் ட்ரினிடெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, விராட் கோஹ்லி பல சாதனைகளை பதிவு செய்தார். ஒரு அணிக்கெதிராக அதிக சதங்களை பதிவு செய்த இந்திய வீரர்கள் வரிசையில், அவர் முறையே மூன்று முதல் ஆறாம் இடத்தை பிடித்துள்ளார்.
அத்தோடு, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக கோஹ்லி, தனது எட்டாவது சதத்தையும் பதிவு செய்தார்.
கோஹ்லி, இலங்கை, அவுஸ்ரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக 8 சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். அவர் 2000 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்துள்ளார்.
மேலும், எதிரணிக்கெதிராக குறைந்த இன்னிங்சுகளில் 2000 ஓட்டங்களை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக 34 இன்னிங்சுகளில் இந்த ஓட்ட இலக்கை எட்டியுள்ளார்.