மழையுடன் கூடிய வானிலை காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளையும், இயற்கை அனர்த்தங்களையும் முன்கூட்டியே தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு கடற்படை குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய கடற்படையின் மெரின் படைப்பிரிவின் அவசர சிகிச்சை பிரிவு, மீட்டல் மற்றும் முதலுதவி பிரிவு, விசேட படகு சேவை ஆகிய பிரிவுகளை உள்ளடக்கிய கடற்படையினர் இந்த குழுவில் உள்ளடங்கியுள்ளனர்.
அவர்கள் தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தெரிவுச் செய்யப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர் நாடு முழுவதும் சேதமடைந்துள்ள பாலங்கள் மற்றும் கால்வாய்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை அண்மையில் முன்னெடுத்ததாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?
தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...
Read more