நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அல்லது பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில், மதுபான விற்பனையை மாற்று வழிமுறையில் கீழ் முன்னெடுக்கும் வழிமுறையொன்று அவசியம் என கலால் வரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.
மதுபான போத்தல்களை இணைய வழியாக விற்பனை செய்யும் வழிமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான தீர்மானமொன்றை எட்டுவது அவசியமானது என கலால் வரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் M.J.குணசிறி தெரிவிக்கின்றார்.
நாடு முடக்கப்பட்ட கடந்த ஒரு மாத காலப் பகுதியில் மாத்திரம், மதுபான விற்பனையின் ஊடாக அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய 1500 கோடி ரூபா இல்லாது போயுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அத்துடன், நாடு முடக்கப்பட்ட காலப் பகுதியில் சாதாரண மதுபான போத்தல் ஒன்று சுமார் 4000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், இணைய வழியாக மதுபானங்களை விற்பனை செய்யும் வழிமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான தேவை தற்போது எழுந்துள்ளதாக கலால் வரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் M.J.குணசிறி தெரிவிக்கின்றார்.