நாட்டு மக்களுக்கான களஞ்சியத்தில் இன்னும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி உள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
இதன்படி அரிசியாலை உரிமையாளர்கள் வழங்கிய தகவலுக்கமைய, நாட்டில் எதிர்வரும் சில வாரங்களில் அரிசி தட்டுப்பாடு நிலவும் அபாயம் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதனால் விரைவில் ஒரு இலட்சம் மெட்ரிக்டொன் அரிசியை இறக்குமதி செய்ய நேரிடுவதாகவும் அமைச்சர் ஊடகமொன்றுக்கு இன்று கூறியுள்ளார்.