கல்முனை 2ம் பிரிவு கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்று காலை சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக கல்முனை பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டது. இறந்த பெண்ணின் மகள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.
இதன்மூலம் கல்முனை 2 அன்னை வேலாங்கன்னி வீதியைச் சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியொருவரின் சடலமே கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.