நாவலப்பிட்டி பகுதியில் பெக்கோ இயந்திரத்தில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை, நாவலப்பிட்டி கிரிமிட்டிகம திஸ்பனகந்த பகுதியிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கட்டிருந்த பெக்கோ இயந்திரத்தினை திருத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பெக்கோ இயந்திரத்தின் ஒரு பகுதி திடிர் என விழுந்ததில் குறித்த நபர் சிக்குண்டு ஸ்தலத்திலையே பலியாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.