நீண்ட காலத்திட்டம் இல்லாமையினாலேயே, இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டு வீழ்ச்சி கண்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
பாராளுமன்ற ஒத்தி வைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
2014ம் ஆண்டு இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை வெற்றிக் கொண்ட பின்னர், உரிய திட்டத்திற்கு அமைய கிரிக்கெட் விளையாட்டு முன்னெடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
இதன்காரணமாகவே, இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு வீழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணிக்காக 105 வீரர்கள் விளையாடியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
குறித்த காலப் பகுதியில் 4 விளையாட்டுத்துறை அமைச்சர்களும், 5 பிரதான பயிற்றுவிப்பாளர்களும் கடமையாற்றியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட பயிற்சியாளர்களின் ஒத்;துழைப்புக்காக, 20 முதல் 30 வரையான பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் சிலர் இடைநடுவில் விட்டுச் சென்றதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான நிலைமைகள் காரணமாகவே, இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ கூறுகின்றார்.