அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைஸர் தடுப்பூசியின் 26,000 தொகுதி இன்று காலை இலங்கையை வந்தடைந்தது.
இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பைஸரின் முதல் தொகுதி இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
அதன்படி, இந்த பைசர் தடுப்பூசியை விரைவில் மக்களுக்கு விநியோகிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
மெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த Pfizer தடுப்பூசியை தென்னாசிய நாடுகளிலேயே இலங்கைக்கே முதன்முதலில் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த தகவலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளதுடன், மகிழ்ச்சியையும் வெளியிட்டுள்ளார்.