திருகோணமலை கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட அஹமட் லேன் பகுதியில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.
10 வயது சிறுவனுக்கும், 55 வயதுடைய ஒருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 18 ஆம் திகதி முதல் இதுவரையில் திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 107 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.