ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க தரையில் தவறி விழுந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
அவருக்கெதிரான முறைப்பாடு குறித்து விசாரணை செய்ய இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்திற்கு இன்று அழைக்கப்பட்டார்.
குறித்த இடத்திற்கு சென்று மீண்டும் திரும்பிய அவர் திடீரென கால்தடுக்கி விழுந்துள்ளார்.
அதன் பின் சிறை அதிகாரிகளின் உதவியுடன் மீண்டும் எழுந்த அவர் சிறைச்சாலை வாகனத்தில் ஏறி சிறைக்குத் திரும்பினார்.