முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு இடையே இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
புலனாய்வுப் பிரிவு இதுகுறித்த அறிக்கை ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கடந்த வார இறுதியில் கையளித்திருப்பதாக அறியமுடிகின்றது.
இந்தப் பின்னணியிலேயே சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையேயான சந்திப்பும் நேற்று நடந்தது.
எனினும் சுதந்திரக் கட்சியிலுள்ள பலரும் இவ்வாறான இரகசிய பேச்சுக்கள் நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.