ஐக்கிய மக்கள் சக்தி இலங்கையிலுள்ள நீதிமன்றங்களுக்கு மாத்திரமன்றி சர்வதேச நீதிமன்றங்களுக்கு சென்றாலும் அவர்களுக்கு தோல்வி ஏற்படுமென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் மக்கள் சந்திப்பொன்று ஊவா பரணகம , அம்பகஸ்துவ பிரதேசத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. குறித்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டபேதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார். பதுளை மாவட்ட வேட்பாளர் உபாலி சமரவீர குறித்த மக்கள் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தார்.
“சிலர் இரண்டு ஐக்கிய தேசியக்கட்சிகள் உள்ளதாக குறிப்பிடுகின்றனர். சிலர் நாங்கள் ஐக்கிய தேசியக்கட்சிக்காரர்கள் என கூறுகிறார்கள். மேலும் சிலர் ஐக்கிய தேசிக்கட்சியில் தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர். எந்த் காலப்பகுதியில் அப்படியொன்று நடந்துள்ளது. இறுதியில் வழக்கு பதிவு செய்தனர். நான் வழக்கு பதிவு செய்யவில்லை. என்னை நீதிமன்றங்களுக்கு அழைத்து சென்றனர். எல்லா நீதிமன்றங்களிலும் தோல்வியே கிடைத்தது. தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் தோல்வியே ஏற்பட்டுள்ளது. அடுத்தும் நீதிமன்றம் செல்லவுள்ளதாக குறிப்பிடுகின்றனர். இலங்கையில் மாத்திரமல்ல தேவையென்றால் சர்வதேச நீதிமன்றத்திற்கும் செல்லுங்கள். அங்கும் தோல்வி ஏற்பட்டால், கடவுளிடம் செல்லுங்கள். எல்லா இடங்களிலும் தோல்வியே கிடைக்கும் என்பதை குறிப்பிடுகின்றேன். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பை எவரும் மாற்றியமைக்க மாட்டார்கள். அதே தீர்ப்பு தான் இரண்டு தடவைகள் மாவட்ட நீதிமன்றங்களிலும் வழங்கப்பட்டுள்ளது.”
இதேவேளை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் பிரச்சார கூட்டமொன்றிலும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். மதவாதமும் இனவாதமும் தொடர்ந்தும் காணப்படுமாயின் இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடுமெனவும் ஐக்கிய தேசியக்கட்சிய அதற்கான சூழலை நாட்டில் ஏற்படுத்தாதென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதன்போது தெரிவித்தார்.