கொழும்பு – புறக்கோட்டை, டேம் வீதியில் உள்ள 5 மாடிக் கட்டடமொன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில், கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.