கொழும்பு கோட்டை மற்றும் மருதானைக்கு செல்லும் வழியில் இரு புகையிரதங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று புதன்கிழமை காலை புறப்பட்ட பயணிகள் புகையிரதம் இரண்டே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும், இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், விரைவில் குறித்த பாதையினூடாக சேவைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் ரயில்வே கட்டுப்பட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.