கேரளாவில் நீடிக்கும் சீரற்ற காலநிலையின் காரணமாக கேரளாவின் வயநாட்டு பகுதியில் பெரும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த மண்சரிவில் 40பேர் சிக்குண்டிருக்கலாம் என அஞ்சப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் மண்சரிவில் சிக்குண்டவர்களில் மூவர் மீட்கப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
கேரள மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்காரணமாக அம்மாநிலத்தின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சீரற்ற காலநிலையின் காரணமாக தொழிலாளர்களின் குடியிருப்புகள், கோயில், பள்ளிவாசல் ஆகியவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
அத்துடன் தொடர் மழையின் காரணமாக மின் வினியோகம்,போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் தடைப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்வு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.