நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கிளிநொச்சி காவல்துறையினர் வாக்குமூலம் இன்று பதிவு செய்தனர்.
கிளிநாச்சியில் உள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து கிளிநொச்சி காவல்துறையினர் இவ்வாறு இன்றைய தினம் வாக்குமூலம் பதிவு செய்து கொண்டனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கு கொள்ள வேண்டாம் என தெரிவித்து நீதி மன்ற தடை உத்தரவு காவல்துறையினரால் பெற்றுக்கொள்ளப்பட்டது.
அதனை மீறி பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் இன்றைய தினம் கிளிநொச்சி காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.