இலங்கையின் கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியம் மற்றும் பொத்துவில் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்பிராந்தியங்களில் அதிகரித்த காற்றின் வேகம் மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, குறித்த கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர, புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களின் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதனால், மீனவர்களும் கடற்சார் ஊழியர்களும் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.