இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிக்கின்றார்.
இந்த கடனுதவி சீன அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுள்ளது.
கடனுதவியை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கை கடந்த 12ம் திகதி கைச்சாத்திடப்பட்டிருந்தது.
கொழும்பிலுள்ள சீன தூதரகத்தில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.