கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று காலை ஆரம்பமாகியுள்ள நிலையில், நாடளாவிய ரீதியிலுள்ள இரண்டாயிரத்து 678 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
அத்துடன், 315 பரீட்சை இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று திங்கட்கிழமை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே பிரதேசத்திலுள்ள ஆனந்த பாலிகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள, பரீட்சை மத்திய நிலையத்திலேயே அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சிங்கள மொழி பாட பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.
1981 க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு முதன் முதலில் தோற்றிய அவர்ற 38 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இந்த பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பரீட்சைகளை எதிர் கொள்வதற்கு பயிற்சிகளை மேற்கொண்டிருந்ததாகவும், அவர் இதற்காக வேண்டி தனியார் ஆசிரியர்கள் நியமித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தனது முதல் க.பொத.த உயர்தரப் பரீட்சையின் போது சிங்கள மொழி பாடத்தில் சாதாரண சித்தியை (S) பெற்றதாகவும், எனவே இம்முறை மீ்ண்டும் சிங்கள மெழி பாடத்திற்கு தோற்றியதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், இம்முறை தனக்கு முதற்தர சித்தி (A) கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.