அம்பாந்தோட்டை – சூரியவெவ, வெவேகம பிரதேசத்தில் பொலிஸாருக்கும் குழுவொன்றுக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று பகல் நடந்த இந்த சம்பவத்தில் பொலிஸாரின் ஜீவ் வண்டி விபத்தில் சிக்கியதோடு அதில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.