மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய மாகாண ஆளுநரும் தென்மாகாண ஆளுநரும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்தமையை தொடர்ந்து அவர்கள் இருவரையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரியிருந்தார் என தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் .
அதனையடுத்து தென்மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோணும் விரைவில் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளாரெனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்த தகவல் வெளியாகியுள்ளது.