Pearl One News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
No Result
View All Result
Pearl One News
No Result
View All Result
Home விளையாட்டு

மேற்கிந்தியாவுடனான தொடரை வென்றது இந்தியா- இலங்கை, பங்களாதேஷ் அணிகளுடன் முதலிடத்தை பகிர்ந்தது மேற்கிந்திய தீவுகள்

திருமலை தாசன் by திருமலை தாசன்
August 5, 2019
in விளையாட்டு
1 min read
15
SHARES
105
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மேற்கிந்தியாவுடனான தொடரை வென்றது இந்தியா- இலங்கை, பங்களாதேஷ் அணிகளுடன் முதலிடத்தை பகிர்ந்தது மேற்கிந்திய தீவுகள்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில், இந்தியா அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 22 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட  தொடரை இந்தியா அணி, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

புளோரிடா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், இந்தியா அணி, தொடரை வெல்லும் முனைப்பிலும், மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை தக்கவைக்கும் முனைப்பிலும் களமிறங்கின.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இந்தியா அணி, கௌரவமான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.

இதன்போது, சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த ரோஹித் சர்மா, 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இப்போட்டியின் போது இரண்டு சிக்ஸர்களை விளாசிய ரோஹித் சர்மா, 107 சிக்ஸர்களுடன் இருபதுக்கு இருபது போட்டிகளில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல், 105 சிக்ஸர்களுடன், இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்க 167 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சு சார்பில், ஒசேன் தோமஸ் மற்றும் செல்டோன் கொட்ரேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கீமோ போல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

168 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆரம்பமே சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

எனினும், மத்திய வரிசையில் களமிறங்கிய ரொவ்மன் பவல் அதிரடியாக துடுப்பெடுத்தாடி அணிக்காக 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

15.3 ஓவர்களின் போது, கிரன் பொலார்ட் 8 ஓட்டங்களுடனும், சிம்ரொன் ஹெட்மியர் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருக்க, மழைக் குறுக்கிட்டது.

இதனையடுத்து இடைவிடாது மழை பெய்ததால், வெற்றியை தீர்மானிப்பதற்கு டக்வத் லுயிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதற்கமைய இந்தியா அணி, டக்வத் லுயிஸ் முறைப்படி 22 ஓட்டங்களால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன்போது, இந்தியா அணியின் பந்து வீச்சு சார்பில், குர்ணல் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், வொஷிங்டன் சுந்தர் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை கைப்பற்றினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இந்தியா அணி சார்பில், அதிரடியாக 20 ஓட்டங்களையும், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய குர்ணல் பாண்ட்யா தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை, இந்த தோல்வியின் மூலம் இருபதுக்கு இருபது ஓவர்கள் கிரிக்கெட்டில் அதிக தோல்விகள் சந்தித்த அணிகள் வரிசையில், 57 தோல்விகளுடன் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன், மேற்கிந்திய தீவுகள் அணி, முதலாவது இடத்தை பகிர்ந்துக் கொண்டது. இதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக தொடர்ச்சியான அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகளின் வரிசையில் இந்தியா அணி, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதுடன், இந்த இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி, நாளை கயானா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Previous Post

வெள்ளவத்தையில் குழுக்களுக்கிடையில் மோதல்-பலப்படுத்தப்பட்டது பாதுகாப்பு

Next Post

பாகுபலி பிரபாஸுக்கு திருமணமா?- அதிர்ச்சியில் பெண்கள்

Next Post
பாகுபலி பிரபாஸுக்கு திருமணமா?- அதிர்ச்சியில் பெண்கள்

பாகுபலி பிரபாஸுக்கு திருமணமா?- அதிர்ச்சியில் பெண்கள்

காஷ்மீரில் பதற்றம் – தடையுத்தரவை அமுல்படுத்தியது இந்திய அரசு

காஷ்மீரில் பதற்றம் - தடையுத்தரவை அமுல்படுத்தியது இந்திய அரசு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?
இலங்கை

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

by Admin PearlOne
November 7, 2021
0

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more
குளியாப்பிட்டி LOCKDOWN

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு? – சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

November 7, 2021
கர்தினாலுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லையா? பீரிஸ் கூறும் தகவல்

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது சிறந்த விடயம்..

November 7, 2021
  • சுகமான வாழ்வு
புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
சுகமான வாழ்வு

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

by திருமலை தாசன்
April 27, 2021
0

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more
சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க
சுகமான வாழ்வு

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

by Anu
December 26, 2020
0

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more
  • சமையல்
பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?
சமையல்

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

by திருமலை தாசன்
July 25, 2020
0

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more
பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?
சமையல்

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

by திருமலை தாசன்
August 25, 2020
0

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more
  • சினிமா
மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!
சினிமா

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

by Anu
June 30, 2021
0

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more
ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்
சினிமா

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

by Anu
June 19, 2021
0

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more

Categories

  • English (3)
  • International (1)
  • Sports (2)
  • Sri Lanka (78)
  • Trincomalee (9)
  • Uncategorized (10)
  • அமானுஷ்யம் (8)
  • ஆன்மீகம் (102)
  • ஆரோக்கியம் (26)
  • இந்தியா (91)
  • இலங்கை (8,689)
  • உலகம் (263)
  • ஓகக்கலை (20)
  • சமையல் (9)
  • சரித்திர நாவல் (71)
  • சினிமா (98)
  • சிறுகதை (31)
  • சுகமான வாழ்வு (12)
  • ஜோதிடம் (291)
  • திருகோணமலை (451)
  • தொழில்நுட்பம் (7)
  • நீரிழிவு நோய் (3)
  • வணிகம் (32)
  • வரலாற்றுப் புதினம் (74)
  • விளையாட்டு (136)
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Contact us: editor@pearlonenews.com

© 2020 Pearl One News - Developed by WEBBRID.

No Result
View All Result
  • முகப்பு
  • சுகமான வாழ்வு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH

© 2020 Pearl One News - Developed by WEBBRID.