Pearl One News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
No Result
View All Result
Pearl One News
No Result
View All Result
Home இலங்கை

முன்பள்ளிகளை அமைச்சொன்றின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை : ஜனாதிபதி

திருமலை தாசன் by திருமலை தாசன்
July 25, 2020
in இலங்கை
1 min read
21
SHARES
205
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஜனாதிபதி தொல்பொருள் சான்றுகளை பாதுகாக்க திட்டம்

முன்பள்ளிகளை அமைச்சொன்றின் கீழ் கொண்டுவந்து குறித்த கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் மாத்தறை கடற்கரை பூங்காவில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். வேட்பாளரான நிபுண ரணவக்க குறித்த மக்கள் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தார். நிபுண ரணவக்கவின் 2020 ம் ஆண்டுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் அடங்கிய இணையத்தள பக்கமும் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக ஜனாதிபதி கலந்துகொண்ட பல்வேறு மக்கள் சந்திப்புக்களின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவதானம் செலுத்தியுள்ளார்.

பிள்ளைகளின் ஆரம்பகால வாழ்க்கையில் முக்கிய பகுதியாக முன்பள்ளிகளே காணப்படுகின்றன. இந்நிலையில் முன்பள்ளிகளின் தரம் மற்றும் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்வி முறை தொடர்பில் முக்கிய திட்டங்களை வகுக்க வேண்டியது கட்டாயமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர் அதற்கு முன்னுரிமை வழங்கி முன்பள்ளிகளை அமைச்சொன்றின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ருஹுணு பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்திலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கலந்துகொள்ளும் மாத்தறை மாவட்டத்திற்கான மக்கள் சந்திப்பு ஆரம்பமானது. உபபீடாதிபதி சிரேஸ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேனவுடன் நட்புறவுரீதியாக கலந்துரையாடிய ஜனாதிபதி கல்வி நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஒன்லைன் முறையிலான கல்வி நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக அதன்போது உபபீடாதிபதி குறிப்பிட்டார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஞ்சன விஜேயசேகரவினால் தெவிநுவர விகாரைக்கு முன்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் அதன்பின்னர் ஜனாதிபதி பங்கேற்றார். குறித்த பிரதேச மக்கள் எதிர்கொண்டுள்ள குடிநீர் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இடைநடுவே கைவிடப்பட்டிருந்த தெவிநுவர விகாரையின் புனர்நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அமைச்சர் டளஸ் அழகப்பெருமவும் அங்கு வருகைதந்திருந்தார். வேட்பளார் மனோஜ் சிறிசேனவினார் மாத்தளை உயன்வத்த பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கலந்து கொண்டார். அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்தார்.

Previous Post

பொதுமக்களின் அரசாங்கமொன்றை ஏற்படுத்தி நாட்டில் அபிவிருத்தி : சஜித்

Next Post

சஜித் தரப்பினர் சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றாலும் தோல்வியே ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் தெரிவிப்பு

Next Post
சஜித் தரப்பினர் சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றாலும் தோல்வியே ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் தெரிவிப்பு

சஜித் தரப்பினர் சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றாலும் தோல்வியே ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் தெரிவிப்பு

எனக்கு வரும் இந்திப்பட வாய்ப்புகளை ஒரு கும்பல் திட்டமிட்டு பறிக்கிறது :

எனக்கு வரும் இந்திப்பட வாய்ப்புகளை ஒரு கும்பல் திட்டமிட்டு பறிக்கிறது :

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?
இலங்கை

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

by Admin PearlOne
November 7, 2021
0

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more
குளியாப்பிட்டி LOCKDOWN

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு? – சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

November 7, 2021
கர்தினாலுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லையா? பீரிஸ் கூறும் தகவல்

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது சிறந்த விடயம்..

November 7, 2021
  • சுகமான வாழ்வு
புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
சுகமான வாழ்வு

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

by திருமலை தாசன்
April 27, 2021
0

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more
சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க
சுகமான வாழ்வு

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

by Anu
December 26, 2020
0

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more
  • சமையல்
பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?
சமையல்

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

by திருமலை தாசன்
July 25, 2020
0

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more
பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?
சமையல்

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

by திருமலை தாசன்
August 25, 2020
0

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more
  • சினிமா
மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!
சினிமா

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

by Anu
June 30, 2021
0

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more
ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்
சினிமா

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

by Anu
June 19, 2021
0

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more

Categories

  • English (3)
  • International (1)
  • Sports (2)
  • Sri Lanka (78)
  • Trincomalee (9)
  • Uncategorized (10)
  • அமானுஷ்யம் (8)
  • ஆன்மீகம் (102)
  • ஆரோக்கியம் (26)
  • இந்தியா (91)
  • இலங்கை (8,689)
  • உலகம் (263)
  • ஓகக்கலை (20)
  • சமையல் (9)
  • சரித்திர நாவல் (71)
  • சினிமா (98)
  • சிறுகதை (31)
  • சுகமான வாழ்வு (12)
  • ஜோதிடம் (291)
  • திருகோணமலை (451)
  • தொழில்நுட்பம் (7)
  • நீரிழிவு நோய் (3)
  • வணிகம் (32)
  • வரலாற்றுப் புதினம் (74)
  • விளையாட்டு (136)
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Contact us: editor@pearlonenews.com

© 2020 Pearl One News - Developed by WEBBRID.

No Result
View All Result
  • முகப்பு
  • சுகமான வாழ்வு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH

© 2020 Pearl One News - Developed by WEBBRID.