திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் சின்னக் கலுவான் பாலத்தின் கீழிருந்து வெடி பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (27) செவ்வாய்கிழமை பி.ப.1.30 மணியளவில் சில வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாலத்தின் கீழ் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் மேற்படி ஆயுதங்களை கண்டு அரச புலனாய்வு பிரிவினருக்கு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் மூதூர் பொலிஸார் வந்து மேற்படி வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.
இதன்போது 02 கைக் குண்டுகள், டி 56 ரக துப்பாக்கி ரவைகள் 15 என்பன மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வெடி பொருட்கள் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.