கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் இலவச வைத்திய முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
பெரியநீலாவணை தொடர்மாடி வீட்டில் இன்று காலை இந்த முகாம் நடைபெற்றது.
கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர் இரா. முரளீஸ்வரன் உட்பட வைத்தியர் குழுவினர் இங்கு வருகை தந்து சகலவித நோயியல் நிபுணர்கள் நோய்களுக்குமான வைத்திய பரிசோதனைகளையும் மேற்கொண்டனர். இந்த வைத்திய முகாம் பயன்பெறுவதற்காக. நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.