நோர்வுட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வுட் தியசிறிகம பகுதியில் ஓட்டோ ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளபோதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை..
சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து குறித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் இன்று காலை 7.30மணியளவில் இடம்பெற்றதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிக்கோயாவிலிருந்து சாமிமலை பகுதியை நோக்கி பயணித்து கொண்டிருந்த போதே இந்த ஓட்டோ விபத்துக்கள்ளாகியுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும். ஏற்படவில்லை என தெரிவித்தனர்.
