நியூசிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய நபர் தொடர்பில் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த நபர், காத்தான்குடி – 01, சேர்ந்த ஐ. எஸ். ஐ.எஸ் இனால் ஈர்க்கப்பட்ட நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 1989 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 7 வயதில் வெளிநாடு சென்றுள்ளார்.
இவர் கொழும்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும் பின்னர் 2011 ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
4 சகோதரங்களை கொண்ட குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாக பிறந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
ஒரு பெண் சகோதரியும் தந்தையாரும் கனடாவில் வசிக்கும் நிலையில், ஏனைய இரண்டு சகோதரர்களும் கட்டார் சவுதியில் வசிக்கின்றனர் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
