மட்டக்களப்பு நாவற்குடாவில் இடம்பெற்ற கோரவிபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் பிரதேசத்தில் இருந்து காத்தான்குடிக்கு கோழிகளை ஏற்றிசென்ற வாகனம் வேககட்டுப்பாட்டை இழந்து, குருநாகல் பிரதேசத்தில் இருந்து காத்தான்குடிக்கு கல் எற்றி சென்ற கனரக வாகனத்துடன் மோதியமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் கோழிகளை ஏற்றிசென்ற வாகனத்தில் பயணித்த மூவரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மற்றையவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில், ஏறாவூரைச் சேர்ந்த லொறியின் சாரதி பதுறுதீன் ஹில்மி ஹசன் (வயது 25) மற்றும் தாவூத் றிழ்வான் (வயது 30) எனும் இருவரே உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், பதுறுதீன் றிஸ்வின் (வயது 21) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் அநேக இடங்களில் இந்த கோழி வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்ற நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
