Pearl One News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
No Result
View All Result
Pearl One News
No Result
View All Result
Home ஆன்மீகம்

தொட்டது துலங்கும் யோகமான ஆண்டாக அமைகின்றது; சிம்ம ராசியினரே உங்களுக்கான பிலவ தமிழ் வருடப் பலன்கள் (14.04.2021 – 13.04.2022)

Anu by Anu
April 17, 2021
in ஆன்மீகம்
1 min read
74
SHARES
383
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தொட்டது துலங்கும் யோகமான ஆண்டாக அமைகின்றது; சிம்ம ராசியினரே உங்களுக்கான பிலவ தமிழ் வருடப் பலன்கள் (14.04.2021 – 13.04.2022)

பிறக்கும் புத்தாண்டு குரு பார்வையோடு பிறப்பதால், நினைத்த காரியம் நிறைவேறும் ஆண்டாகவே அமைகின்றது. 9-ம் இடத்திற்கு அதிபதியான செவ்வாயும், 10-ம் இடத்திற்கு அதிபதியான சுக்ரனும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருப்பதால், தொழில் வளம் மிகச் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்போடு புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பொருளாதார நிலை உயரும். புத -ஆதித்ய யோகம் இருப்பதால் மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும் வருடமாக இந்த வாரம் அமையும்.

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் உச்சம் பெற்று, தனலாபாதிபதியான புதனோடு இணைந்திருக்கின்றார். எனவே ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். சகோதர வர்க்கத்தினர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். தனவரவில் இருந்த தட்டுப்பாடுகள் அகலும். ‘வாங்கியதைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்ததை வாங்க முடியவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது விடிவுகாலம் பிறந்துவிட்டது. தடையின்றித் தனவரவு வந்து கொண்டேயிருக்கும். புகழ்மிக்கவர்களோடு இணைந்து புதிய தொழிலைத் தொடங்குவீர்கள்.

10-ம் இடத்தில் உள்ள செவ்வாய், சுக்ரன் வீட்டில் பரிவர்த்தனை யோகம் பெறுகின்றார். தொழில் ஸ்தானம் வலுவாக உள்ளது. ஸ்தம்பித்து நின்ற தொழில் இனி வெற்றி நடைபோடும். வாடிக்கையாளர்கள் வந்த வண்ணமாக இருப்பர். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். அரசியல் பிரமுகர்களின் ஆதரவு கிடைக்கும். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடந்து கொண்டே இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். ஊர் மாற்றம், இலாகா மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தால், அதுவும் நிறைவேறும்.

6-ம் இடத்தில் சனி இருக்கின்றார். அதுவும் சொந்த வீட்டில் பலம் பெற்றிருக்கின்றார். 6-ம் இடம் என்பது எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றை குறிப்பதாகும். எனவே மறைமுக எதிர்ப்பும், சிறிதளவு கடனும் இருந்துகொண்டே இருக்கும். இதையெல்லாம் தாண்டி, குரு பகவானின் பார்வை உங்கள் ராசியில் பதிவதுதான் யோகம். அந்த குருவைப் பலப்படுத்த வியாழன் தோறும் விரதமிருந்து குரு பகவானை வழிபடுவதோடு, யோகபலம் பெற்ற நாளில் பாக்கிய ஸ்தானாதிபதிக்குரிய தெய்வங்களை வழிபட்டு வாருங்கள்.

குருவின் வக்ர இயக்கம்

ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். மீண்டும் 14.9.2021 முதல் 12.10.2021 வரை, மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரைபஞ்சம -அஷ்டமாதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறும்பொழுது பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான் என்றாலும், 9-ம் இடத்திற்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால், தந்தை வழி உறவில் விரிசல்கள் வரலாம். சொத்துக்களை விற்கும் பொழுதும், வாங்கும் பொழுதும், பத்திரங்களில் கையெழுத்திடும் பொழுதும் நன்றாக சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

குருப்பெயா்ச்சி காலம்

ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குருபகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன்பிறகு 13.4.2022-ல் மீன ராசிக்கு பெயா்ச்சியாகிச் செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை உங்கள் ராசியிலும், 3, 11 ஆகிய இடங்களிலும் பதிகின்றது.

ராசியைக் குரு பார்ப்பதால், லட்சியங்கள் நிறைவேறும். நினைத்தபடி வாழ்க்கைப் பாதையில் மாற்றங்கள் ஏற்படும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். அனைத்து முன்னேற்றங்களும் அடுக்கடுக்காக வந்து சேரும். ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். மருத்துவச் செலவுகளில் இருந்து விடுதலை கிடைக்கும். குடும்ப முன்னேற்றத்திற்கு குந்தகம் விளைவித்தவர்கள், உங்களை விட்டு விலகுவர்.

ராகு-கேது பெயர்ச்சி காலம்

21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3-ம் இடத்திற்கு கேதுவும், 9-ம் இடத்திற்கு ராகுவும் வருகிறார்கள். 9-ல் ராகு சஞ்சரிக்கும் பொழுது பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த நல்ல முன்னேற்றங்கள் உண்டு. தளராத முயற்சியும், தன்னம்பிக்கையும் உங்கள் நிலையை உயர்த்தும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு உழைத்த உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் முயற்சியில் இருந்த தடை அகலும். ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்படும் நேரம் இது என்பதால், தேக்க நிலை மாறும். திடீர் வரவும் வந்து சேரும்.

3-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் உடன்பிறப்புகளின் ஒற்றுமை பலப்படும். அவர்களின் இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டுப் புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு. பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். வழக்குகள் சாதகமாக அமையும். ‘மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, அவர்கள் வாயிலாக ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்போடு, புதிய ஒப்பந்தங்களை வரவழைத்துக் கொள்வீர்கள். இழந்த பொறுப்புகள், பதவிகள் கூட சிலருக்கு கிடைக்கும்.

சனியின் வக்ர காலம்

12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனிபகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான் என்றாலும், 7-ம் இடத்திற்கும் அதிபதியாக சனிபகவான் இருப்பதால் குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்கலாம். ஒரு சில காரியங்களில் ஏமாற்றங்கள், பண இழப்புகள் ஏற்படலாம். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால், பிரச்சினைகள் உருவாகலாம். பிள்ளைகளால் தொல்லைகளும், செலவுகளும் உண்டாகும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நேரம் இது.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை செவ்வாய் – சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் மிகுந்த கவனம் தேவை. திடீர் விரயங்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். வாங்கிய சொத்துக்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். மனக்கசப்பு தரும் தகவல் உறவினர்கள் வாயிலாக வரலாம். உயர்ந்த மனிதர்களின் பகையையும், உடன் பணிபுரிபவர்களால் உபத்திரவங்களையும் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சலுகைகள் மறுக்கப்படலாம். வேலைப்பளு கூடும். வேலையை விட்டு விலகும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு உருவாகலாம். தெய்வ வழிபாடுகளால் அமைதி காண வேண்டிய நேரம் இது.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டு புதிய வாய்ப்புகள் பலவற்றையும் வரவழைத்துத் தரும் ஆண்டாகவே அமையப் போகின்றது. கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். புதிய திருப்பங்களைச் சந்திக்கும் விதத்தில் குருவின் பார்வை பலம்கொடுக்கப் போகின்றது. எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தாய் மற்றும் உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். அவர்கள் எதிர்கால நலன்கருதி தீட்டிய திட்டங்களும் வெற்றிபெறும். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். செவ்வாய் -சனி பார்வை காலத்தில், எதையும் யோசித்துச் செய்வது நல்லது.

வளர்ச்சி தரும் வழிபாடு

வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குருபகவானை வழிபடுவதோடு, வைரவன்பட்டி கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தியை யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வந்தால் எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமையும்.


Tags: tamil newsசிம்ம ராசிபிலவ தமிழ் வருடம்
Previous Post

வௌிநாட்டில் இருந்து வருவோருக்கு மேலும் சில கட்டுப்பாடுகள் – சுதத் சமரவீர

Next Post

விகாரைக்கு சென்றுவந்த மர்ம நபர் யார்? பொலிஸார் தீவிர தேடுதல்!

Next Post
விகாரைக்கு சென்றுவந்த மர்ம நபர் யார்? பொலிஸார் தீவிர தேடுதல்!

விகாரைக்கு சென்றுவந்த மர்ம நபர் யார்? பொலிஸார் தீவிர தேடுதல்!

மட்டக்களப்பில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?
இலங்கை

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

by Admin PearlOne
November 7, 2021
0

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more
குளியாப்பிட்டி LOCKDOWN

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு? – சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

November 7, 2021
கர்தினாலுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லையா? பீரிஸ் கூறும் தகவல்

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது சிறந்த விடயம்..

November 7, 2021
  • சுகமான வாழ்வு
புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
சுகமான வாழ்வு

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

by திருமலை தாசன்
April 27, 2021
0

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more
சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க
சுகமான வாழ்வு

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

by Anu
December 26, 2020
0

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more
  • சமையல்
பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?
சமையல்

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

by திருமலை தாசன்
July 25, 2020
0

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more
பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?
சமையல்

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

by திருமலை தாசன்
August 25, 2020
0

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more
  • சினிமா
மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!
சினிமா

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

by Anu
June 30, 2021
0

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more
ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்
சினிமா

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

by Anu
June 19, 2021
0

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more

Categories

  • English (3)
  • International (1)
  • Sports (2)
  • Sri Lanka (78)
  • Trincomalee (9)
  • Uncategorized (10)
  • அமானுஷ்யம் (8)
  • ஆன்மீகம் (102)
  • ஆரோக்கியம் (26)
  • இந்தியா (91)
  • இலங்கை (8,689)
  • உலகம் (263)
  • ஓகக்கலை (20)
  • சமையல் (9)
  • சரித்திர நாவல் (71)
  • சினிமா (98)
  • சிறுகதை (31)
  • சுகமான வாழ்வு (12)
  • ஜோதிடம் (291)
  • திருகோணமலை (451)
  • தொழில்நுட்பம் (7)
  • நீரிழிவு நோய் (3)
  • வணிகம் (32)
  • வரலாற்றுப் புதினம் (74)
  • விளையாட்டு (136)
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Contact us: editor@pearlonenews.com

© 2020 Pearl One News - Developed by WEBBRID.

No Result
View All Result
  • முகப்பு
  • சுகமான வாழ்வு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH

© 2020 Pearl One News - Developed by WEBBRID.