தெலுங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசினால் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு தமிழக பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்ற இவரின் பதவிகாலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் அவர் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக தமிழகத்திற்கான பா.ஜ.க தலைவராக புதிய ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.