காலாவதியான தற்போதைய அரசியலமைப்பினை இரத்து செய்வதற்கான தருணம் ஏற்பட்டிருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கான நிகழ்வை கொழும்பில் நேற்று நடத்தினார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், புதிய யாப்பு உருவாக்கப்பட்டு விட்டதாகவும், அதற்கான முழுமையான திட்டத்தினை அறிமுகப்படுத்தும் காலமும் நெருங்கிவிட்டதாக தெரிவித்ததுடன், சரியான நேரத்தில் அவற்றை செய்வதாகவும் கூறினார்.