தம்புள்ளை – ஹபரணை வீதியில் மெஹஸ்வெவ என்ற பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் மேலும் 2 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வண்ியுடன் வேன் மோதியமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்