Pearl One News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
No Result
View All Result
Pearl One News
No Result
View All Result
Home இலங்கை

தமிழர்களின் பிரச்சினைகளை மறந்துவிட்டதா கூட்டமைப்பு?அனந்தி விளாசல்

திருமலை தாசன் by திருமலை தாசன்
August 9, 2019
in இலங்கை
1 min read
11
SHARES
113
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழர்களின் பிரச்சினைகளை மறந்துவிட்டதா கூட்டமைப்பு?அனந்தி விளாசல்

கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றதே ஒழிய தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தை மறந்து விட்டதென வடக்கு மாகாணத்தின் முன்னாள் அமைச்சரான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.சுழிபுரத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனந்தி சசிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “கூட்டமைப்பினர் குறித்து நாமல், பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.

ஆனால் அவர் கூட்டமைப்பினரைக் குற்றஞ்சாட்டுவதற்கு முன்னர் தாங்கள் தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிகளையும் கொடுமைகளையும் தமிழ் மக்கள் மறந்துவிடவில்லை என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். அந்த உண்மைகள் வெளிக் கொண்டவரப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும்.

ஆகவே நிலைமைகள் இவ்வாறிருக்கின்ற போது, நாமலின் கருத்தை தர்க்க ரீதியாகவேனும் மறுக்க முடியாதவர்களாக கூட்டமைப்பினர் இருக்கின்றனர். உண்மையில் அவரின் கருத்துக்களுக்கு பதிலடியை வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு பதிலடி வழங்கினால் கூட்டமைப்பினரின் இன்னும் பல விடயங்கள் வெளி வந்துவிடுமோ என்ற அச்சத்தால் அவர்கள் பதிலளிக்கவில்லையோ தெரியாது.

நாமலின் கருத்துக்கு கூட்டமைப்பினர் பதிலளிக்காதது தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்பதியை ஏற்படுத்தியிருக்கின்றது.

அதிலும் குறிப்பாக மூத்த அரசியல்வாதியான மாவை சேனாதிராசா இதற்குரிய பதிலை உடனடியாக வழங்கியிருக்க வேண்டும். உண்மையான சரியான தகவல்களை பொறுப்புக் கூற வேண்டியவர்கள் வழங்க வேண்டியது தான் பொருத்தமானதாக இருந்திருக்கும்

இதேவேளை ஐ.நாவில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஐபக்ஷவை, மின்சாரக் கதிரையில் இருந்து, தானே பாதுகாத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுகிறார்.

மஹிந்தவை பாதுகாத்த பிரதமரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதுகாத்து வருவது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு இவர்கள் மூவரும் மாறி மாறி பாதுகாத்த போதும் உண்மையில் கூட்டமைப்பினரை நம்பி வாக்களித்த மக்கள்தான் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்.

மேலும் தமிழ் மக்களுக்கு எதிராக எத்தனையே நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி செய்திருந்தது. ஆனால் அந்தக் கட்சிக்கே கூட்டமைப்பினர் தொடர்ந்தும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

கடந்த காலங்களில் நல்லாட்சி என்றும் அதன் பின்னர் தீர்விற்காக தேவை என்றும் ஆதரவை வழங்குவதாக கூறினர். ஆனால் இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்களுக்கு தீர்வும் இல்லை. பிரச்சனைகள் பலவும் தீர்க்கப்படவும் இல்லை.

இவ்வாறான நிலையில் வரவுள்ள ஐனாதிபதித் தேர்தலிலும் தமிழரசுக் கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரை ஆதரிக்க போவதாக சொல்வதென்பது கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்களை பாதுகாத்து, அவர்களது பிரச்சனைகளைத் தீர்ப்பதை விடவும் ஐக்கிய தேசியக் கட்சியை வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனரா? என்ற கேள்வி எழுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஓகக்கலை

Next Post

சஹ்ரானினால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் தான் – கதறும் இளைஞன்

Next Post
சஹ்ரானினால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் தான் – கதறும் இளைஞன்

சஹ்ரானினால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் தான் - கதறும் இளைஞன்

கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு-வஜிர நம்பிக்கை

கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு-வஜிர நம்பிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?
இலங்கை

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

by Admin PearlOne
November 7, 2021
0

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more
குளியாப்பிட்டி LOCKDOWN

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு? – சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

November 7, 2021
கர்தினாலுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லையா? பீரிஸ் கூறும் தகவல்

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது சிறந்த விடயம்..

November 7, 2021
  • சுகமான வாழ்வு
புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
சுகமான வாழ்வு

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

by திருமலை தாசன்
April 27, 2021
0

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more
சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க
சுகமான வாழ்வு

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

by Anu
December 26, 2020
0

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more
  • சமையல்
பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?
சமையல்

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

by திருமலை தாசன்
July 25, 2020
0

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more
பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?
சமையல்

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

by திருமலை தாசன்
August 25, 2020
0

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more
  • சினிமா
மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!
சினிமா

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

by Anu
June 30, 2021
0

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more
ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்
சினிமா

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

by Anu
June 19, 2021
0

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more

Categories

  • English (3)
  • International (1)
  • Sports (2)
  • Sri Lanka (78)
  • Trincomalee (9)
  • Uncategorized (10)
  • அமானுஷ்யம் (8)
  • ஆன்மீகம் (102)
  • ஆரோக்கியம் (26)
  • இந்தியா (91)
  • இலங்கை (8,689)
  • உலகம் (263)
  • ஓகக்கலை (20)
  • சமையல் (9)
  • சரித்திர நாவல் (71)
  • சினிமா (98)
  • சிறுகதை (31)
  • சுகமான வாழ்வு (12)
  • ஜோதிடம் (291)
  • திருகோணமலை (451)
  • தொழில்நுட்பம் (7)
  • நீரிழிவு நோய் (3)
  • வணிகம் (32)
  • வரலாற்றுப் புதினம் (74)
  • விளையாட்டு (136)
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Contact us: editor@pearlonenews.com

© 2020 Pearl One News - Developed by WEBBRID.

No Result
View All Result
  • முகப்பு
  • சுகமான வாழ்வு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH

© 2020 Pearl One News - Developed by WEBBRID.