தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பதவி வகித்த மணிகண்டன், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி பரிந்துரையின் பேரில் அமைச்சர் எம். மணிகண்டன் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அந்தத் துறையை மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூடுதலாகக் கவனிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.