எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாமே போட்டியிடப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்று காலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள பங்காளிக் கட்சிகளுடனான சந்திப்பின்போதே பிரதமர் இந்த அறிவிப்பை விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் இதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில்தான் பிரதமர் இருந்ததாகவும், ஆனால் அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேற்கொண்டுவரும் பிரசாரங்கள் மற்றும் அழுத்தங்களைக் கட்டுப்படுத்த இந்த அறிவிப்பை விடுத்திருக்கலாம் எனவும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருசில அமைச்சர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.