Pearl One News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
No Result
View All Result
Pearl One News
No Result
View All Result
Home ஆன்மீகம்

சோதனைகளை சாதனைகளாக மாற்றி ஜெயிப்பீர்கள்; கடக ராசியினரே உங்களுக்கான பிலவ தமிழ் வருடப் பலன்கள் (14.04.2021 – 13.04.2022)

Anu by Anu
April 15, 2021
in ஆன்மீகம்
1 min read
137
SHARES
768
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (27-07-2020)!

பிறக்கும் புத்தாண்டு அஷ்டமத்து குருவின் ஆதிக்கத்தோடும், கண்டகச் சனியின் சஞ்சாரத்தோடும் பிறக்கின்றது. எனவே விரயங்களையும், விருப்பதிற்கு எதிரான சூழ்நிலையையும் சந்திக்கக்கூடிய ஆண்டாகவே இந்தப் புத்தாண்டு அமைகின்றது. இருப்பினும் தொழில் ஸ்தானத்தில் நான்கு கிரகங்களின் சேர்க்கை ஏற்பட்டு கூட்டுக்கிரக யோகம் உருவாகின்றது. அத்தோடு புத -சுக்ர யோகமும், புத – ஆதித்ய யோகமும் இருப்பதால், காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். தெய்வ வழிபாடுகளும், முன்னோர் வழிபாடும் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன், தொழில் ஸ்தானத்தில் தனாதிபதி சூரியனோடும், சகாய -விரய ஸ்தானாதிபதி புதனோடும் இணைந்திருக்கின்றார். யோகம் தரும் செவ்வாய், லாப ஸ்தானத்தில் ராகுவோடு கூடியிருக்கின்றார். எனவே துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உறவினர்களைக் காட்டிலும் நண்பர்களின் ஆதரவோடு நல்ல காரியங்கள் பலவற்றையும் செய்து முடிப்பீர்கள். சுக்ரனும், செவ்வாயும் பரிவர்த்தனை யோகம் பெற்று ஆண்டு தொடங்குவதால், ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டு. பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் மன அமைதி குறைவாகவே இருக்கும்.

புத – ஆதித்ய யோகம் இருப்பதால் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடலாம். பிள்ளைகளின் பட்ட மேற்படிப்பு சம்பந்தமாக, ஏதேனும் முயற்சிகள் செய்தால் அதில் வெற்றி கிடைக்கும். சுபவிரயங்கள் அதிகரிக்கும் ஆண்டு இது. பிள்ளைகளின் மணவிழா, பெற்றோர்களின் மணிவிழா, முத்து விழா, பவளவிழா மற்றும் புதுமனை புகுவிழா போன்ற விழாக்களை நடத்திப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

குருவின் வக்ர இயக்கம்

ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். அதோடு 16.6.2021 முதல் அவர், வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். 14.9.2021 முதல் 12.10.2021 வரை மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான். இதன் விளைவாக கடன்சுமை குறையும். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு, புதிய பொறுப்புகள் வரலாம். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும். குரு 9-ம் இடத்திற்கு அதிபதியாக விளங்குவதால், தந்தை வழியில் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.

குருப்பெயா்ச்சி காலம்

ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குரு பகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, அதன் பிறகு 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன்பிறகு 13.4.2022-ல் மீன ராசிக்குப் பெயா்ச்சியாகிச் செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 2, 4, 12 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது. எனவே அந்த இடங்களுக்குரிய ஆதிபத்யங்கள் வாயிலாக உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகின்றது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது 2-ம் இடம் என்பது வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிப்பதாகும். எனவே குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். கொடுக்கல் – வாங்கல்கள் ஒழுங்காகும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத சில காரியங்கள், இப்பொழுது நடைபெறும். கல்வித் தடை அகலும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் தாய்வழி ஆதரவு கிடைக்கும். தொழில், முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். கடல்தாண்டிச் சென்று பணிபுரிய வேண்டுமென்று விரும்பியவர்களுக்கு அது கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். இடம், வீடு வாங்குவது சம்பந்தமாக அல்லது விற்பது சம்பந்தமாக நீங்கள் செய்த முயற்சி கைகூடும்.

குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் பயணங்கள் அதிகரிக்கும். குறிப்பாக வீட்டிற்குத் தேவையான விலைஉயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் கல்யாண காரியங்களை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் திடீரென மாற்றங்கள் வரலாம். வரும் மாற்றங்கள் எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வதே சிறந்தது. மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்க்க முன்வரவில்லை என்பதனால், வேறு வேலைக்கு முயற்சி செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.

மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. இதன் விளைவாக இதுவரை இருந்து வந்த ஆரோக்கியத் தொல்லை அகலும். ரண சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொன்ன மருத்துவர்கள், இனி சாதாரண சிகிச்சையிலேயே குணமாக்கிவிடலாம் என்று ஆணித்தரமாகச் சொல்வர். மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் இனி வந்து கொண்டேயிருக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதியும், வீட்டை விரிவு செய்து கட்டும் முயற்சியிலும் உங்களுடைய எண்ணங்கள் செல்லலாம்.

ராகு-கேது பெயா்ச்சி காலம்

21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 4-ம் இடத்தில் கேதுவும், 10-ம் இடத்தில் ராகுவும் வரப்போகின்றார்கள். 10-ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால், தொழில் ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே, உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, ‘சுயதொழில் செய்தால் என்ன?’ என்ற சிந்தனை உருவாகும். தொழில் செய்ய முன்வரும்பொழுது கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பொருளாதார முன்னேற்றத்தில் இருந்த பிரச்சினைகள் அகலும். அரசு வழியில் கூட எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சனியின் வக்ர காலம்

12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனிபகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. எனவே வாழ்க்கைத் துணையோடு பிரச்சினைகள் வரலாம். உங்களுக்கு வாய்த்த தொழில் பங்குதாரர்கள் உங்களை விட்டு விலகலாம். எதிர்பாராத இழப்புகள், விரயங்கள் உண்டு. எதையும் எளிதில் நம்பும் உங்களுக்கு, சனி பகவான் அனுபவத்தை கற்றுக் கொடுக்கும் நேரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணிமாற்றம் அல்லது பணிநீக்கம் செய்யப்படலாம்.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

14.4.2021 முதல் 3.6.2022 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய் – சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் மிகவும் விழிப்புணர்ச்சி தேவை. என்னதான் நீங்கள் முறையாகச் செயல்பட்டாலும், எதிரிகள் உங்கள் செயல்பாடுகளில் குறையையே காண்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மனக்கலக்கம் ஏற்படும் நேரம் இது.

பெண்களுக்கான பலன்கள்

கொஞ்சம் விழிப்புணா்ச்சியோடு செயல்பட வேண்டிய ஆண்டாக இது அமைகிறது. கண்டகச் சனியின் ஆதிக்கத்தால் கடமையில் தொய்வு ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் அடிக்கடி ஏற்படலாம். கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுங்கள். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பணிநீக்கம் ஆகாமல் பார்த்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். செவ்வாய் – சனி பார்வை காலத்தில் மிகுந்த கவனம் தேவை. அனுமன் வழிபாடு அல்லல் தீர்க்கும்.

வளா்ச்சி தரும் வழிபாடு

பவுர்ணமி தோறும் விரதமிருந்து அம்பிகையை வழிபாடு செய்து வாருங்கள். மேலும் உங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் அபிராமி அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டால் வாழ்க்கை வசந்தமாக மாறும். 

Tags: tamil newsகடக ராசிவருடப் பலன்கள்
Previous Post

மாகாண சபை முறைமையை ஒழிப்பதற்கு இடம் கொடுக்கமாட்டோம்! – சுமந்திரன்

Next Post

சுமந்திரன் மற்றும் சிறிதரன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

Next Post
சுமந்திரன் மற்றும் சிறிதரன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

சுமந்திரன் மற்றும் சிறிதரன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

கம்பஹா மாவட்ட மக்களுக்கு 5000 ரூபா

5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?
இலங்கை

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

by Admin PearlOne
November 7, 2021
0

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more
குளியாப்பிட்டி LOCKDOWN

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு? – சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

November 7, 2021
கர்தினாலுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லையா? பீரிஸ் கூறும் தகவல்

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது சிறந்த விடயம்..

November 7, 2021
  • சுகமான வாழ்வு
புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
சுகமான வாழ்வு

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

by திருமலை தாசன்
April 27, 2021
0

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more
சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க
சுகமான வாழ்வு

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

by Anu
December 26, 2020
0

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more
  • சமையல்
பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?
சமையல்

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

by திருமலை தாசன்
July 25, 2020
0

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more
பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?
சமையல்

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

by திருமலை தாசன்
August 25, 2020
0

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more
  • சினிமா
மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!
சினிமா

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

by Anu
June 30, 2021
0

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more
ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்
சினிமா

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

by Anu
June 19, 2021
0

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more

Categories

  • English (3)
  • International (1)
  • Sports (2)
  • Sri Lanka (78)
  • Trincomalee (9)
  • Uncategorized (10)
  • அமானுஷ்யம் (8)
  • ஆன்மீகம் (102)
  • ஆரோக்கியம் (26)
  • இந்தியா (91)
  • இலங்கை (8,689)
  • உலகம் (263)
  • ஓகக்கலை (20)
  • சமையல் (9)
  • சரித்திர நாவல் (71)
  • சினிமா (98)
  • சிறுகதை (31)
  • சுகமான வாழ்வு (12)
  • ஜோதிடம் (291)
  • திருகோணமலை (451)
  • தொழில்நுட்பம் (7)
  • நீரிழிவு நோய் (3)
  • வணிகம் (32)
  • வரலாற்றுப் புதினம் (74)
  • விளையாட்டு (136)
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Contact us: editor@pearlonenews.com

© 2020 Pearl One News - Developed by WEBBRID.

No Result
View All Result
  • முகப்பு
  • சுகமான வாழ்வு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH

© 2020 Pearl One News - Developed by WEBBRID.